திரு கார்த்திக் அவர்கள் இந்த தளத்தில் மொழிபெயர்த்துப் பதிப்பித்து வரும் மிலி போலாக்கின் "காந்தி எனும் மனிதர்" என்ற நூலின் தமிழாக்கத் தொடரை வாசித்து வருகிறேன். தெளிவான, இயல்பான மொழிபெயர்ப்பு. இதில் நாம் காந்தியின் பொது வாழ்வின் தென்னாப்பிரிக்க துவக்க நாட்களை நெருக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது. காந்தி விஷயத்தில் பொது வாழ்வும் தனி வாழ்வும் ஒன்றுதான் என்பதால் காந்தி என்ற மனிதர் அந்த ஆரம்ப நாட்களிலும் சரி, அவரது இறுதி நாட்களிலும் சரி ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. குறிப்பாக, உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் விவாதிப்பதிலும், தான் சரி என்று நினைப்பதை தொடர்ந்து வலியுறுத்துவதிலும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவேயில்லை. காந்தியை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் எது தவிர்க்க முடியாத காந்தி என்று உணர மிலி போலாக்கின் நூலே போதுமானதாக இருக்கிறது. காந்தியின் அனைத்து செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகளின் விதைகளும் அவர் ஒரு மகாத்மா என்ற பிரமிப்பு இல்லாமல் ஒரு சாதாரண மனிதரின் அசாதாரண இயல்புகளாக இதில் வெளிப்படுகின்றன.
காந்திய தத்துவவியலாளரான ம்ரிணால் மிரி என்பவரை கௌரவிக்கும் விதமாக, "Grounding Morality - Freedom, Knowledge and the Plurality of Cultures," என்ற புத்தகத்தில் தத்துவத் துறையில் இருப்பவர்கள் எழுதிய பதினேழு கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அதில், பிந்து பூரியின் "Secularism and the Devout - A Gandhian Reading" என்ற கட்டுரையை வாசித்தேன். மிலி போலாக்கின் தொடரில் கார்த்திக் மொழிபெயர்த்த சில விஷயங்கள் நினைவுக்கு வந்தன.
காந்திய தத்துவவியலாளரான ம்ரிணால் மிரி என்பவரை கௌரவிக்கும் விதமாக, "Grounding Morality - Freedom, Knowledge and the Plurality of Cultures," என்ற புத்தகத்தில் தத்துவத் துறையில் இருப்பவர்கள் எழுதிய பதினேழு கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அதில், பிந்து பூரியின் "Secularism and the Devout - A Gandhian Reading" என்ற கட்டுரையை வாசித்தேன். மிலி போலாக்கின் தொடரில் கார்த்திக் மொழிபெயர்த்த சில விஷயங்கள் நினைவுக்கு வந்தன.