அறிவிப்பு

காந்தி -இன்று தளத்தில் காந்தி,காந்தியர்கள் ,காந்திய செயல்பாடு - பற்றிய கட்டுரைகள் ,நினைவுக் குறிப்புகள், மொழிபெயர்ப்புகள், ஓவியங்கள் போன்ற படைப்புகளை நண்பர்கள் பகிர்ந்து கொள்ளலாம்..ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்- forgandhitoday@gmail.com

Sunday, May 20, 2012

காந்தியும் விமரிசனங்களும் -4- மைக்கேல் பிளாட்கின்



ஆங்கில கட்டுரையின் தமிழாக்க தொடர்ச்சி...

காந்தி சாதி அமைப்பை இந்து மதத்தின் ஓர் களங்கம் என்றே கருதினார். சாதி அமைப்பு சில ஆக்கப்பூர்வ பங்களிப்புகளையும் ஆற்றியுள்ளது என்று அவர் கூறியதன் பின்னணியில் அவருடைய சத்திய வேட்கை மட்டுமே இருக்கிறது. அதாவது சாதி அமைப்பின் சாதக பாதக அம்சங்கள் என இரண்டையுமே கணக்கில் கொள்ள வேண்டும் என அவர் கருதினார். காந்தி எப்போதும் தீண்டத்தகாதவர்களின் நண்பனாகவே இருந்து வந்தார், அவர்களின் நிலையை கண்டு வருந்தினார். அவர் தீண்டத்தகாதவர்களை தன் ஆசிரமத்திற்குள் அனுமதித்து தீண்டாமைக்கு எதிராக போராடினார். அப்படி அவர் செயலாற்றியதற்கு பல இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், பலர் நிதியுதவியை நிறுத்தினர், ஆனால் அவர் அதை கைவிடவில்லை. “நம்மைவிட ஒருவர் தாழ்ந்தவர் என நம்புவது மிகப்பெரிய பாவம், அந்த பாவமே நம்மை களங்கப்படுத்துகிறதே ஒழிய இவர்களின் தொடுகை அல்ல..சாதி அமைப்பு என்பது இந்து மதத்தின் ஓர் களங்கம் தான் அதை நாம் முடிவுக்கு கொண்டுவந்தாக வேண்டும்” என்றார் அவர்.

Friday, May 18, 2012

காந்தியுடன்- 3 -நல்லிணக்கமே நிலையான நிவாரணம்




காந்தியின் தாக்கத்தை சுசேதா கிருபளானி போன்றவர்களின் நேரடி அனுபவத்தைக் கொண்டு அறியும்போது நமக்கு அறிமுகமாகும் காந்தி புத்தகங்களில் நாம் காணும் காந்தியைப் போலில்லை. இந்த காந்தியுடன் அவரது தொண்டர்கள் முரண்படுகின்றனர். ஏன், காந்தியின் செயல்களே அவற்றின் பின்விளைவுகளின் ஒளியால் அடையும் தெளிவின் துணையின்றி, நிகழ்காலத்தின் வெவ்வேறு சாத்தியங்களின் குழப்பத்தால் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன.

Wednesday, May 16, 2012

காந்தியும் விமரிசனங்களும் -3- மைக்கேல் பிளாட்கின்



மைக்கேல் பிளாட்கின் எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழாக தொடர்ச்சி...

மார்க்சியர் காந்தியை எதிர்ப்பதும் விமரிசிப்பதும் இயல்பானதே. அதேபோல் பாகிஸ்தானிய இஸ்லாமியரான சர்வார் ஹசனும் காந்தியையும் அவருடைய கொள்கைகளையும் விமரிசிப்பதில் ஆச்சரியமில்லை. முஸ்லீம்களை காந்தி ஈர்க்க முடியவில்லை என்பது காந்தியின் மிக முக்கியமான தோல்வி என்கிறார் அவர். இதற்கு காரணம் இந்திய முஸ்லீம்களின் தேவை என்ன என்பதை புரிந்துக்கொள்ள அவரால் இயலவில்லை என்பதே என்கிறார் சர்வார்.

Monday, May 14, 2012

காந்தியுடன் -2- முதல் சந்திப்புகள்.






காந்தியுடனான முதல் சந்திப்புகளைப் படிக்கும்போது ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கிறது : அவர் குறித்து முதல் பார்வையில் எழும் கருத்து பெரும்பாலும் மாறுவதேயில்லை. காந்தி எப்போதும் இயல்பாக இருந்ததையும், அவரது இயல்பு நிலையே உயர்ந்ததாக இருந்ததையும் இது உணர்த்துவதாக நினைக்கிறேன்.

ஆச்சாரிய ஜெ பி கிருபளானி முதல் முறை காந்தியை சந்திக்கும்போது அவருக்கு ஒரு வித்தியாசமான மனிதரைச் சந்தித்த உணர்வே ஏற்படுகிறது. காந்தியை அவர் தாகூரின் சாந்தி நிகேதனில் சந்திக்கிறார். ஒரு பாமர கிராமத்து மனிதரின் ஆடையை அணிந்திருந்த காந்தி அப்போது பழங்களையும் கடலைகள், கொட்டைகள் போன்ற இயற்கை உணவுகளையும் மட்டுமே உட்கொள்பவராக இருந்தார். இது கிருபளானிக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால் அங்கு வந்த சில நாட்களிலேயே ஒரு பெரும் மாற்றத்தை காந்தி ஏற்படுத்திவிட்டதைக் காணும் கிருபளானி காந்திய இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள முடிவெடுக்கிறார்.

Saturday, May 12, 2012

காந்தியும் விமரிசனங்களும்- 2- மைக்கேல் பிளாட்கின்





மைக்கேல் பிளாட்கின், 'Resistance to the Soul- Gandhi and his critic' என்ற தலைப்பில் எழுதிய முக்கியமான ஒரு கட்டுரையின் தமிழாக்கத்தின் இரண்டாம் பகுதி இது.


தத்தின் இறுதி முடிவு, இது வன்முறையை அடக்குவதற்கான முடிவு அல்ல மாறாக முதலாளி வர்க்க நலனை பேணுவதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்பதே. மேலும் அகிம்சை என்பது வர்க்க நலனுக்கான ஓர் முகமுடி மட்டுமே. அவர் முன்வைக்கும் பிரச்சனையின் மையப் புள்ளி, அங்கு நிலவிய மக்கள் கூட்டத்தின் வெறிக்கும் வரி மற்றும் குத்தகை செலுத்துவதற்கும்  அல்லது செலுத்தாமல் இருப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத போது அது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது என்பதே.

Thursday, May 10, 2012

காந்தியுடன் ...-1





"Understanding Gandhi: Gandhians in Conversation with Fred J. Blum" - Edited by Usha Thakkar and Jayshree Mehta என்ற புத்தகம் Sage Publications நிறுவனத்தால் சென்ற ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஜே பி கிருபளானி, ரைஹானா தியாப்ஜி, தாதா தர்மாதிகாரி, சுசிலா நய்யார், ஜாவேர் படேல், சுசேதா கிருபளானி என்று எட்டு காந்தியர்களுடனான நீண்ட உரையாடல்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த எட்டு பேட்டிகளையும் ப்ளூம் ஏறத்தாழ ஒரே மாதிரி தன்னுடன் உரையாடுபவருக்குத் தேவைப்படும் சுதந்திரத்தைக் கொடுத்தாலும் சீரான ஒரு டெம்ப்ளேட்டில், பதிவு செய்துள்ளார். இதனால் காந்தி குறித்த சில முக்கியமான கேள்விகளுக்கு இந்த எட்டு பேரிடமிருந்தும் பதில் கிடைக்கிறது; மேலும், இந்த எட்டு காந்தியர்கள் குறித்த ஒரு பரந்த பார்வையும் அவர்கள் சுதந்திரமாக உரையாடுவதால் நமக்குக் கிடைக்கிறது. 

Tuesday, May 8, 2012

காந்தியும் விமரிசனங்களும்- 1- மைக்கேல் பிளாட்கின்




மைக்கேல் பிளாட்கின், 'Resistance to the Soul- Gandhi and his critic' என்ற தலைப்பில் எழுதிய முக்கியமான ஒரு கட்டுரையின் தமிழாக்கம் இது. காந்தியை விமர்சிக்கும் முக்கியமான தரப்புகளை பற்றி மைக்கேல் பேசுகிறார். மார்க்சிய தரப்பு, இந்துத்வ தரப்பு, பாகிஸ்தானிய முஸ்லீம் தரப்பு, தலித் தரப்பு போன்ற முக்கியமான தரப்பினரின் பிரதான குற்றசாட்டுகளையும் அதற்கான சரியான எதிர்வினைகளையும் தன் கோணத்தில் மைக்கேல் பதிவு செய்திருக்கிறார்.
--------------------
இந்த இருபதாம் நூற்றாண்டை அதன் இறுதியில் நின்று பின்னோக்கி பார்க்கும்பொழுது, இதுவரை மனித குலம் அறிந்திடாத, மாபெரும் அழிவுகளைச் சந்தித்த நூற்றாண்டாகவே இது நினைவுகூரப்படும் என்று தோன்றுகிறது. மரணங்களும், மாபெரும் அழிவுகளும் நிறைந்த நூற்றாண்டு இது. இந்த மாபெரும் மானுட அழிவிற்கு உந்து சக்தியாக இருந்தவர்கள், மற்றும் அவர்களின் மனிதாபிமானமற்ற அடக்குமுறைகளை எதிர்த்துத் துணிவோடு போராடியவர்கள் என இரு தரப்புகளை வரலாறு நம்முன் நிறுத்துகிறது. எத்தனையோ மனிதநேயம் கொண்ட மனிதர்களுக்கும், அமைதி விரும்பிகளுக்கும் இடையே அடக்குமுறைக்கு எதிராகத் துணிவோடு போராடிய தரப்பை சேர்ந்த ஒரு மனிதர் தனித்து விளங்குகிறார், அவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.